Thursday 17 March, 2011

இனைய தளத்தில் வந்த ஒரு கற்பனை கவிதை !!! (Just for Joke)


கவிஞர் வாலியின் கவிதை(கற்பனைதான்)

===========================================

"கொற்றவனே… கொற்றவனே….

ஸ்பெக்ட்ரத்தை விற்றவனே…

தறுதலைகளை பெற்றவனே…

சூடு சொரணை அற்றவனே…

கொற்றவனே.. கொற்றவனே..

உன்னால் அடைய வேண்டியது ஏற்றம்.

தமிழகத்துக்கு கிடைத்ததோ ஏமாற்றம்.

மக்களுக்கு மிஞ்சியதோ முற்றம்.

உனக்கு அள்ளித் தந்தது ஸ்பெக்ட்ரம்.

தமிழ்ல உனக்கு புடிச்ச வார்தை கோடி

நீ பெத்து வச்சுருக்க புள்ளைங்களோ கேடி

தள்ளு வண்டில போனாலும் தளராது உன் பாடி..

உன் புள்ளைங்களுக்கு நீதான் சரியான டாடி

எக்கச்சக்கமா சேத்துருக்க துட்டு

நீ கதை வசனம் எழுதுனா சூப்பர் ஹிட்டு

உன்னால தமிழகம் போனது கெட்டு

உனக்கு மக்கள் அடிக்கப் போறாங்க ரிவிட்டு"